இங்கிலாந்து முன்னாள் பிரதமர் உறவினர் இஸ்லாத்தை ஏற்றார்.



அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!
நீண்ட நெடுங்காலமாக கிருஸ்துவ பாரம்பரியத்தை கொண்ட  இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனியான லாரன் பூத்சமீபத்தில் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இதை அவரே அறிவித்துள்ளார்.
பிளேரின் மனைவி செரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரிதான் இவர்.பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார்சமீபத்தில் ஈரான் சென்றிருந்தஅவர் அங்கு இஸ்லாமிய மார்க்கத்தின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டுமுஸ்லிமாக தன்னை அறிவித்துக் கொண்டார்.
உலக அளவில் பிரபலமாகி வரும்ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேரஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டிவியில் இவர்பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார்அமெரிக்கஇங்கிலாந்து ஆதரவுசிஎன்என், பிபிசி போன்றவற்றுக்குப் போட்டியாக அறிமுகமான பிரஸ்டிவி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கதுபூத் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட.
சமீபத்தில்இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொகண்ட உலக அமைதிமற்றும் ஒற்றுமை என்ற பெயரிலான பேரணியில்பூத்தும் கலந்துகொண்டார்அப்போதுதான் அவர் மதம் மாறியிருக்கலாமோ என்ற பேச்சுஎழுந்ததுதற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார் பூத்.
ஈரானில் வைத்து தான் இஸ்லாம் மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டேன் என கூறும் 43 வயதாகும் பூத்இப்போது தான் தினசரி ஐந்து வேளைதொழுவதாகும், சில சமயம் மசூதிக்கும் போவதாகும் கடந்த 45நாட்களாக ஆல்கஹால் கலந்த பானம் எதையும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது வெளியில் செல்லும்போது முஸ்லீம் பெண்களைப் போல தனதுதலையைச் சுற்றிலும் துணி கட்டிக் கொள்கிறார் பூத்எதிர்காலத்தில்புர்க்கா அணியவும் முடிவு செய்துள்ளாராம்குரானை தினசரிபடிக்கிறாராம்.
தனது இந்த மதமாற்றம் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்பது தனக்குத்தெரியும் என்று கூறும் பூத்ஒவ்வொரு வினைக்கும் ஒருஎதிர்வினையுண்டு என்பதை நான் அறிவேன் என்கிறார்.
பூத்தின் மதமாற்றம் குறித்து செரி பிளேரும்டோனி பிளேரும் இதுவரைகருத்து தெரிவிக்கவில்லை.
டோனி பிளேரே 2007ம் ஆண்டு வரை சர்ச் ஆப் இங்கிலாந்தில்உறுப்பினராக இருந்தவர்தான்அதன் பின்னர்தான் அவர் ரோமன்கத்தோலிக்கராக மாறினார்செர்ரி பிளேர் ஆரம்பத்திலிருந்தே ரோமன்கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பூத்மார்னிங் ஸ்டார் என்ற கம்யூனிஸ்ட் நாளிதழில் ஒருகட்டுரை எழுதியிருந்தார். அதில்டோனி பிளேரை கடுமையாகவிமர்சித்திருந்தார்அதில்பாலஸ்தீனத்தின் ரபா, நபுலஸ் ஆகியநகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்து போன தங்களதுஉறவினர்களின் உடல்கள் மீது விழுந்து அழும் தாய்மார்களி்ன் கண்ணீரைடோனி பிளேர் மறந்து விட்டார்குறைந்தபட்சம்இந்த நகரங்களின்பெயர்களாவது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லைஇந்தநகரங்களைச் சேர்ந்த எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைஇழந்து பரிதவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர்இஸ்ரேலின் இந்த ராட்சதகொடூரத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறீர்களா பிளேர் என்று காட்டமாககேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.